பாஜ மீனவர் அணி செயற்குழு தீர்மானம் பிப்ரவரி மாதம் சென்னையில் மாநாடு: 3 மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை: தமிழக பாஜ மீனவர் அணியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மீனவர் அணி தலைவர் எஸ்.சதீஷ் குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள் செம்மலர் சேகர்,  கொட்டிவாக்கம் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பாஜ தேசிய துணை தலைவர் குப்புராம், தெற்கு ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆர்.முரளிதரன் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில்  மீனவர் அணி துணை தலைவர் வெங்கடாச்சலம் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து மீனவர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் மீனவர் அணி தலைவர் சதீஷ்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பாஜ மீனவர் அணி சார்பில் சென்னையில் பிப்ரவரி மாதம் மாநாடு நடக்கிறது. இதில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், ராதா  மோகன் சிங், தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். கடல் எல்லை பகுதி மீனவர்களுக்கு தெளிவாக தெரியும் வகையில்,  மிதப்பு மூலம் விளக்கு அமைத்து தெரியப்படுத்தி மீனவர்களின் இறப்பை தவிர்க்க வேண்டும். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு வைக்க வேண்டும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: