சீட்டு விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் ஓடஓட விரட்டி ரவுடி படுகொலை: 6 பேர் கும்பலுக்கு வலை

பெரம்பூர்: சென்னை ஓட்டேரி, டோபிகானா பகுதியை சேர்ந்தவர் குமரன் (22) ரவுடி. இவரது மனைவி பாரதி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் சஞ்சனா என்ற குழந்தை உள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால்  பாரதி இறந்தார்.சமீபத்தில் கொலை, வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்ட வழக்குகளில், தொடர்புடைய குமரனை டிபி.சத்திரம் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் சிறையில்  இருந்து வெளியே வந்தார். இந்நிலையில் நேற்று மாலை கே.எம்.கார்டன் இரண்டாவது தெரு வழியாக குமரன் நடந்து சென்றார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல், அவரை ஓடஓட விரட்டி அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர்  ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.தகவலறிந்து புளியந்தோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். குமரனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் 76வது வார்டு மாநகராட்சி அலுவலகம் பின்புறம் சீட்டு விளையாடும்போது ஏற்பட்ட தகராறில் ைஹதர் (எ) அப்பு (25) என்பவருக்கும், குமரனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஏற்பட்ட வாக்குவாதம்  முற்றியுள்ளது. பின்னர் குமரனை அந்த கும்பல் வெட்டி படுகொலை செய்தது தெரிய வந்தது.இதையடுத்து ஓட்டேரி தாமோதரன் நகர், ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்த ஹைதர் என்ற அப்பு, அவரது நண்பர்கள் அபி, அபிநேஷ், நரேந்திரன் உள்ளிட்ட 6 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: