வாலிபர்களிடம் வழிப்பறி

சென்னை: மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் ஹராஜ்கான் (19). விருகம்பாக்கம், காந்திநகர் உணவகத்தில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று வேலை முடித்துவிட்டு ஹராஜ்கான் சேக் தனது நண்பர்களான அயூப்கான்  (22) வாரிஸ் (20) ஆகிய 3 பேருடன் பேசிக்கொண்டு இருந்தபோது முகத்தில் துணியை கட்டிக்கொண்டு வந்த மர்ம நபர்கள் இவர்களை கத்தியால் தாக்கி பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.  விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: