திருவனந்தபுரத்தில் 12 கோடி மதிப்புள்ள போதை பொருள் கடத்தல்: மதுரை வாலிபர் உள்பட 2 பேர் கைது

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் இருந்து மாலத்தீவுக்கு ₹12 கோடி போதை பொருளை கடத்த முய ன்ற, மதுரையை சேர்ந்தவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் ஒரு கும்பல் போதை பொருளை கடத்த திட்டமிட்டிருப்பதாக கலால் துறை ஆய்வாளர் அனில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதிகாரிகள் ரகசிய விசாரணையில் இறங்கினர். அப்போது,  திருவனந்தபுரம் மேம்பாலம் பகுதியில் 2 பேர் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை அதிகாரிகள் மடக்கி பிடித்து, அவர்களிடம் இருந்த 11 கிலோ கஞ்சா எண்ணெய்யை கைப்பற்றினர். இதன் மதிப்பு  ₹12 கோடி.விசாரணையில் அவர்கள் மதுரையை சேர்ந்த சாதிக்(41), இடுக்கி மாவட்டம், நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்த பாபுசேவியர் (41) என்பது தெரியவந்தது. தொடர்ந்து இருவரிடமும் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை  நடத்தினர். அதில், மாலத்தீவை சேர்ந்த ஒருவரிடம் இந்த எண்ணெய்யை விற்பனை செய்ய கொண்டு வந்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: