மண்ணச்சநல்லூர் அருகே வெறிநாய்கள் கடித்து ஆடுகள் பலி

மண்ணச்சநல்லூர்: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த திருப்பைஞ்சீலி வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(58). விவசாயி.  இவர் பத்து ஆடுகளையும், இரண்டு பசு மாடுகளையும்  வளர்த்து வருகிறார். இவர் தினமும் ஆடுகள் மற்றும் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றுவிட்டு பின்னர் அவைகளை மாலை வீட்டிலுள்ள பட்டியில் அடைப்பது வழக்கம். இந்நிலையில் நேற்றும் ஆடுகளை மேய்ச்சலுக்கு பின் மாலை பட்டியில் அடைத்துள்ளார். இன்று அதிகாலை பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 2 ஆடுகளை வெறிநாய்கள் கடித்து குதறியதில்அவைகள் பலியாயின. மற்ற ஆடுகள் தொடர்ந்து கத்தியதையடுத்து மாரியப்பன் பட்டிக்கு சென்று பார்த்தபோது 10க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் பட்டிக்குள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் பட்டியில் இருந்த வெறி நாய்களை விரட்டியடித்தார்.

இதுகுறித்து விவசாயி மாரியப்பன் கூறுகையில், திருப்பைஞ்சீலியில் 100க்கும் மேற்பட்ட வெறி நாய்கள் உள்ளன. இதுகுறித்து ஊராட்சி செயலரிடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.

மேலும் அப்பகுதியில் வசித்து வரும் சாந்தி என்பவரது மகள் கனகா(12) என்ற சிறுமியை கடந்த வாரம் வெறிநாய் கடித்து காயப்படுத்தியது. திருப்பைஞ்சீலியில் வெறிநாய்கள் அதிகளவில் உள்ளதால் சிறிவர் முதல் பெரிவர்கள் வரை ரோட்டில் நடந்து செல்ல அஞ்சுகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: