திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கள்ளிவலசு பகுதியில் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதியதில் சிறுமி உயிரிழந்தாள். விபத்தில் 10 வயது சிறுமி ஜனவர்த்தினி பரிதாபமாக உயிரிழந்தாள். மேலும் 2 வயது சிறுமி உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.