சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் யாகம் நடத்தியதாக கூறுவது ஆதாரமற்றது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுக எந்த சூழ்நிலையிலும் தனித்தன்மையை இழக்காது என அவர் தெரிவித்தார். எடுபிடி, துதிப்பாடுவது, அடிமை சாசனம் என்பது அதிமுகவின் அகராதியிலேயே கிடையாது என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியில் கூறியுள்ளார்.