சென்னை: தலைமை செயலகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தி இருப்பது மரபு மீறிய செயல் என திருமாவளவன் கூறியுள்ளார். தலைமை செயலகத்தில் யாகம் நடத்தி இருப்பதை வி.சி.கட்சி கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார். கோடநாடு விவகாரம் பற்றி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டியது முதல்வரின் கடமை என திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டியில் இதனை தெரிவித்தார்.