சென்னை: தலைமை செயலகத்தில் யாகம் நடத்தியது பற்றி ஓபிஎஸ் விளக்க வேண்டும் என சென்னை சோழிங்கநல்லூரில் திருமண நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வர் ஆவதற்குத்தான் ஓபிஎஸ் யாகம் நடத்தியதாக ஸ்டாலின் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். கோடநாடு கொலை, கொள்ளை விசாரணையை சந்திக்க எடப்பாடி பதவி விலக வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எடப்பாடி பழனிசாமி விசாரணையை சந்திக்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.