சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..... ரிக்டரில் 6.7 ஆக பதிவு: 2 பேர் பலி

சிலி: சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகியுள்ளது. தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டில் உள்ள கோகியும்போ கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில், 53 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.7 ஆக பதிவானது.

இதனையடுத்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அனால் சிறிது நேரத்திலேயே அது விளக்கிக்கொள்ளப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 2 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் நிலநடுக்கம் ஏற்பட்ட அதிர்ச்சியில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: