பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்ததில் 66 பேர் பலி

திலாஹுலில்பான்: மெக்சிகோ நாட்டின் திலாஹுலில்பான் நகர் பகுதியில், நிலத்தில் சென்ற பெட்ரோல் குழாயில் துளையிட்டு நேற்று முன்தினம் இரவு ஒரு கும்பல் பெட்ரோல் திருடியுள்ளது. அப்போது திடீரென கசிவு ஏற்பட்டு பெட்ரோல் பீறிட்டது. இதை பிடிக்க ஏராளமானோர் கேன்களுடன் திரண்டனர். பெட்ேரால் ஆவியாகி அப்பகுதியில் சூழ்ந்திருந்தது. அந்த நேரத்தில் சிகரெட் புகைப்பதற்காக ஒருவர் தீப்பெட்டியை பற்ற வைத்துள்ளார். இதில் பலத்த சப்தத்துடன் பெட்ரோல் குழாயில் தீப்பற்றியது. இதில் பெட்ரோல் பிடிப்பதற்காக அங்கு நின்றிருந்த 66 பேர் தீயில் கருகி பலியாகினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: