வாஷிங்டன்: அணுஆயுத விவகாரம் குறித்து அமெரிக்கா மற்றும் வடகொரிய அதிபர்கள் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வந்ததால் சர்வதேச நாடுகளின் கண்டனத்திற்கு ஆளானது. குறிப்பாக வடகொரியா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. இதனைதொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்பும் வடகொரியா அதிபர் கிம் ஜோங் கடந்த ஆண்டு ஜூனில் பேசி பேச்சுவார்த்தை நடத்தினர். என்றாலும் பனிப்போர் ஓய்ந்த பாடு இல்லை இந்நிலையில் இரு நாட்டுத் தலைவர்களும் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டியது மிகவும் அவசியம் என்று ஐநா சபை கூறியுள்ளது.