தமிழக ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கு : தலைமை செயலாளர் அறிக்கை அளிக்க உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி தொடரப்பட்ட வழக்கில் தலைமை செயலாளர் அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முனிகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கில், தமிழகம் முழுவதும் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் 19,000 ஏரிகள் உள்ளதாகவும் இந்த ஏரிகள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.

பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக கடந்த 2017ம் ஆண்டு மத்திய கணக்கு தணிக்கை துறை தாக்கல் செய்துள்ள அறிக்கையில் 39,261 ஏக்டர் அளவில் ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வழக்கு நீதிபதிக்கு சத்யநாராயணன், ராஜமாணிக்கவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தலைமை செயலரை பிரதிவாதியாக சேர்த்து கணக்கு தணிக்கை துறை அளித்த அறிக்கை குறித்து நிலை அறிக்கையை 4 வாரத்திற்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: