ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகர் அருகேயுள்ள கன்டா கர் சவுக் பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் வாகனங்கள் சேதமாகியுள்ளன. ஆனால் குண்டு வெடிப்புக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.