கரூர் : தாந்தோணி ஒன்றியம் கோயம்பள்ளியில் சிதிலமடைந்த அரசு பள்ளியை சீரமைக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தாந்தோணி ஒன்றியம் கோயம்பள்ளியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் உள்ள ஓட்டு கட்டிடங்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது. ஓடுகள் விழுந்தும், சுவர்கள் ஓட்டையாகவும் உள்ளது. மாணவ, மாணவியருக்கு மதிய உணவு தயாரிக்கும் கூடமும் சீரமைப்பு பணிகள் செய்யப்படாமல் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.