புதுடெல்லி: சபரிமலையில் இதுவரை 51 பெண்கள் ஐயப்பனை வழிப்பாடு செய்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த 24 பெண்கள் உள்பட 51 பேர் சபரிமலையில் தரிசனம் செய்துள்ளதாக கேரள அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் ஐயப்பனை வழிபட பாதுகாப்பு தருவதாகவும் கேரள அரசு உறுதியளித்துள்ளது.