தூத்துக்குடி: ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களில் மேலும் 2 பேரை அதிகாலையில் தூத்துக்குடி போலீசார் கைது செய்துள்ளனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவை சேர்ந்த வழக்கறிஞர் ஹரிராகவன், மைக்கேல் தனிஸ் ஆகியோர் தற்போது கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். முன்னதாக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதை எதிர்த்து வரும் சமூக செயல்பாட்டாளர் சந்தோஷ் என்பவர் புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் பகுதியில் கைது செய்யப்பட்டார். போலீசாரின் இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து பொதுமக்கள் நேற்று பிற்பகல் தொடங்கி நள்ளிரவைத் தாண்டியும் விடிய விடிய கொட்டும் பனியிலும் முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். இதில் பங்கேற்ற ஹரிராகவன் மற்றும் மைக்கேல் ஆகியோர் போராட்டம் நடத்த மக்களை தூண்டியதாக புகார் எழுந்தது.