மதுரை: ஹெல்மெட் அணியாத விவகாரத்தில் இனிமேல் இதுபோன்று நடக்காது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்துள்ளார். இதனையடுத்து, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது.