சென்னை: ஏரி ஆக்கிரமிப்புகள் குறித்து தலைமைச் செயலாளர் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 19,000 ஏரிகளை பாதுகாக்க கோரி திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முனிகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.