பொங்கல் வைத்து ஆடு, கோழி பலியிட்டால் பாம்பு வராது என்பது ஐதீகமாக உள்ளது. இதனால், அந்த ஆண்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடு-கோழிகளை பலியிட்டு வழிபாடு செய்தோம் என்றனர். விழாவில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க பர்கூர் டிஎஸ்பி தங்கவேல் தலைமையில் பாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் முன்னிலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். விழாவையொட்டி, மலை பகுதியில் பல்வேறு தின்பண்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. மிட்டாய் கடைகள் அணிவகுத்திருந்தன. சிற்றுண்டி கடைகளில் விற்பனை களை கட்டியது. ஐஸ் வியாபாரம் சூடுபிடித்தது. ரங்க ராட்டினத்தில் ஆடியவாறு மக்கள் பொழுது போக்கினர். பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி