புதுடெல்லி: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்து டெல்லியில் இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம் அளித்தார். இளம் விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஒரு மாநிலத்திற்கு 3 மாணவர்கள் வீதம், 36 மாணவர்களுக்கு இஸ்ரோ பயிற்சி அளிக்கும் என்று சிவன் தெரிவித்தார். 8-ம் வகுப்பு தேறிய மாணவர்களுக்கு ராக்கெட் ஏவுதளத்தில் ஒருமாதம் பயிற்சி அளிக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். செயற்கோள் செய்வது பற்றி மாணவர்களுக்கு விளக்கப்படும் என்றும், இஸ்ரோவின் ஆராய்ச்சி கூடங்களுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுவர் என்று அவர் தெரிவித்தார்.