புதுடெல்லி: சபரிமலை சென்ற 2 பெண்களுக்கு பாதுகாப்பு தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை சென்ற கேரள பெண்கள் பிந்து, கனகதுர்கா ஆகியோருக்கு போதிய பாதுகாப்பு வழங்க கேரள காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 2ம் தேதி பிந்து, கனகதுர்கா ஆகிய இருவரும் சபரிமலை சென்று ஐயப்பனை வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.