சென்னை: பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு பணியில் இடஒதுக்கீட்டை 50% உயர்த்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதமர் மோடிக்கு வலியறுத்தியுள்ளார். மேலும், மத்தியில் ஆட்சி அஸ்தமனம் ஆகும் நேரத்தில் இடஒதுக்கீட்டை பாஜக கையிலெடுத்திருக்கிறது எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.