சென்னை: சென்னை மாதவரம் பால்பண்ணை சி.கே.எம் காலணியில் விஜயன் என்பவர் வீட்டில் 50 சவரன் நகை மற்றும் ரூ.10,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. விஜயன் கேரளாவுக்கு சென்றிருந்த போது வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.