கும்பகோணம்: கோடநாடு கொலை, கொள்ளையில் எடப்பாடிக்கு தொடர்பு இருக்கும் போல தெரிவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான உண்மை விரைவில் தெரியவரும் என்று கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தெரிவித்துள்ளார். மேலும் மக்களவை தேர்தலில் சில கட்சிகளுடன் கூட்டணி பற்றி பேசிவருவதாக அவர் தெரிவித்தார்.