அமித்ஷாவுக்கு பன்றி காய்ச்சல்: எய்ம்சில் அனுமதி

புதுடெல்லி: பா.ஜ தலைவர் அமித்ஷா பன்றி காய்ச்சல் காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். பா.ஜ தலைவர் அமித்ஷா டிவிட்டரில் நேற்று வெளியிட்ட வெளியிட்ட தகவலில் ‘‘எனக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதற்கான சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது. கடவுள்  கருணையால், நான் விரைவில் குணமடைவேன்’’ என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து டெல்லி வட்டாரங்கள் கூறுகையில், ‘‘நெஞ்சடைப்பு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக பா.ஜ தலைவர் எய்ம்ஸ் மருத்துவமனையில்  நேற்று இரவு 9 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்’’ என கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: