கொல்கத்தா: ‘கன்னித்தன்மையுள்ள பெண், சீலிடப்பட்ட பாட்டில் அல்லது பாக்கெட்’ என்ற வாசகத்தை யாரோ ஒருவர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இதற்கு கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் இன்டர்நேஷனல் ரிலேசன்ஸ் துறையில் பணியாற்றும் பேராசிரியர் கனக் சர்க்கார் என்பவர் லைக் போட்டுள்ளார். இதற்கு மாணவர்-ஆசிரியர் குழுவினர் கண்டனம் தெரிவித்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியதால், சர்க்காரை, ஜாதவ்பூர் பல்கலைக்கழக துணைவேந்தர் சுரன்ஜன் தாஸ் பதவி நீக்கம் செய்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த சர்க்கார், ‘‘சமூக வலைதளத்தில் நண்பர்கள் வட்டாரத்தில் வெளியான கருத்துக்கு ஜாலியாக லைக் போட்டேன். இதை பொது கருத்தாக கருதக்கூடாது’’ என்றார்.