நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற உழைப்போம்: தொண்டர்களுக்கு ஓபிஎஸ்-இபிஎஸ் கடிதம்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஜெயலலிதா செயல்படுத்தி வந்த நலத் திட்டங்களோடு, புதிய புதிய திட்டங்களையும் செயல்படுத்தி கொண்டிருக்கிறோம். எல்லோருக்கும் இனிய பொங்கலாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1,000 பொங்கல் பரிசாக அரசு வழங்கியது. எதிரிகளும், துரோகிகளும் நமது ஒற்றுமையை பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள். நமக்கு அவப்பெயர் உண்டாக்க நினைக்கிறார்கள்.

 எம்ஜிஆர், ஜெயலலிதா மறைந்தாலும், நம்மை வெல்ல எவராலும் இயலாது என்பதை காட்ட வேண்டும். நம் கண் முன்னே நாடாளுமன்ற பொதுத்தேர்தல் என்ற களம் தெரிகிறது. எந்த தேர்தல் எப்பொழுது வந்தாலும், தேர்தல் களத்திலே விசுவாச தொண்டர்களாகிய நாம் வெற்றி வாகை சூடுவோம். அதற்காக அனைவரும் அயராது உழைப்போம், ஒற்றுமையோடு ஓயாது உழைப்போம். இதையே எம்ஜிஆரின் பிறந்த நாள் சபதமாக எடுப்போம், நினைத்ததை முடிப்போம்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: