சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஜெயலலிதா செயல்படுத்தி வந்த நலத் திட்டங்களோடு, புதிய புதிய திட்டங்களையும் செயல்படுத்தி கொண்டிருக்கிறோம். எல்லோருக்கும் இனிய பொங்கலாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1,000 பொங்கல் பரிசாக அரசு வழங்கியது. எதிரிகளும், துரோகிகளும் நமது ஒற்றுமையை பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள். நமக்கு அவப்பெயர் உண்டாக்க நினைக்கிறார்கள்.