நாகர்கோவில்: கூட்டணி பற்றி பேசும்போது எந்த கட்சியுடன் பேசினாலும் ரகசியமாக எதற்கு பேச வேண்டும். வெளிப்படையாக நாங்கள் பேசுவோம் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொன்னார்.நாகர்கோவிலில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:கொடநாடு விவகாரம் தொடர்பாக மிகப்பெரிய வலை பின்னப்பட்டுள்ளது. அந்த வலையில் அரசியல் உள்நோக்கம் இருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனை தமிழக அரசு கட்டாயம் கண்டுபிடிக்க வேண்டும். உண்மையிலேயே கூட இருக்கலாம், இல்லை என்று கூறமாட்டேன். குற்றம் கண்டிப்பாக நடந்துள்ளது. ஆனால் யார் இதனை உருவாக்கியுள்ளனர் என்பதை கண்டுபிடிக்க வேண்டியது தமிழக முதல்வரின் கடமை.