கூட்டணி பற்றி நாங்கள் வெளிப்படையாக பேசுவோம்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

நாகர்கோவில்: கூட்டணி பற்றி பேசும்போது எந்த கட்சியுடன் பேசினாலும் ரகசியமாக எதற்கு பேச வேண்டும். வெளிப்படையாக நாங்கள் பேசுவோம்  என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொன்னார்.நாகர்கோவிலில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:கொடநாடு விவகாரம் தொடர்பாக மிகப்பெரிய வலை பின்னப்பட்டுள்ளது. அந்த வலையில் அரசியல் உள்நோக்கம் இருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனை தமிழக அரசு கட்டாயம் கண்டுபிடிக்க வேண்டும். உண்மையிலேயே  கூட இருக்கலாம், இல்லை என்று கூறமாட்டேன். குற்றம் கண்டிப்பாக நடந்துள்ளது. ஆனால் யார் இதனை உருவாக்கியுள்ளனர் என்பதை கண்டுபிடிக்க வேண்டியது தமிழக முதல்வரின் கடமை.

பா.ஜ கூட்டணி மிக வலு நிறைந்த, பலம் பொருந்தியதாக உள்ளது. இன்றுள்ள நிலையில் தமிழகத்தில் குறைந்தபட்சமாக 75 சதவீதம் இடங்களை கைப்பற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பா.ஜ அங்கம் வகிக்கும் கூட்டணி மிகப்பெரிய பலம் பொருந்தியதாக இருக்கும். கூட்டணி பற்றி பேசும்போது எந்த கட்சியுடன் பேசினாலும் ரகசியமாக எதற்கு பேச வேண்டும். வெளிப்படையாக நாங்கள் பேசுவோம். அதில் தயக்கம்  காட்டமாட்டோம். இதில் கடந்த கால வரலாறு என்ன? என்பதையும் பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: