கோபி: கோபி அருகே உள்ள கொடிவேரி அணை பகுதியில் பவானி ஆற்றில் மூழ்கி திருப்பூரை சேர்ந்த இளம் பெண் உட்பட மூன்று பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொடிவேரி அணை உள்ளது. இந்த அணைக்கு விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அதிகளவு வருகின்றனர். நேற்று, திருப்பூரை சேர்ந்த தாஸ்(29), யோகேஷ்வரன்(24), ஜெனிட்டாமேரி(22), மெர்சி(49) அவரது மகன்கள் அலெக்ஸ்(27), செபாஸ்டின்(25), அலெக்சின் மனைவி டயானா(24), உறவினர்கள் கிளிண்டன்(21), அமலா(21), டெய்சி(29) உள்ளிட்ட 10 பேர் கோபியில் உள்ள சர்ச் ஒன்றின் பாதிரியார் தம்பிதுரை(49) என்பவரது வீட்டுக்கு வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர். அனைவரையும் தம்பிதுரை கொடிவேரி அணைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள மற்றொரு உறவினரின் தோட்டத்தின் அருகே உள்ள பவானி ஆற்றில் குளித்துள்ளனர். தாஸ் ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி விழுந்த தாஸ் ஆற்றில் மூழ்கினர்.