வனப்பகுதியில் தனிமையில் இருந்தபோது காதலனை கொன்றுவிட்டு காதலி கூட்டு பலாத்காரம்: திருச்சி அருகே 4 வாலிபர்கள் வெறிச்செயல்

மண்ணச்சநல்லூர்: திருச்சி அருகே பொறியியல் கல்லூரி  மாணவன், தனது காதலியுடன் வனப்பகுதியில் ஜாலியாக இருந்தபோது அந்த வழியாக  வந்த 4 மர்ம நபர்கள மாணவனை படுகொலை செய்து விட்டு மாணவியை மாறி  மாறி  பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம்  சிறுகனூர் அருகே திண்ணக்குளம் ஊரை சேர்ந்தவர் கண்ணன். விவசாயி. இவரது மகன்  தமிழ்வாணன் (23). சமயபுரம் அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில்  இறுதி ஆண்டு படித்து வந்தார்.  இதே கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தவர் ராணி (22) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இருவருக்கும்  பக்கத்து பக்கத்து ஊர்க்காரர்கள் என்பதாலும், ஒரே வகுப்பில் படித்து  வந்ததாலும் காதல் மலர்ந்தது. நேற்று முன்தினம்  பொங்கல்  விடுமுறை தினம் என்பதால் இருவரும் மாலையில் பைக்கில் சென்னை-திருச்சி தேசிய  நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே உள்ள கொணலை மலைமாதா கோயிலுக்கு சென்றனர்.  கோயிலில் இரவு 7.30 மணி  வரை இருந்துவிட்டு  ஊர் திரும்பினர். 8 மணியளவில் கண்ணாக்குடி-புஞ்சை சங்கேந்தி இடையே  வனத்துறைக்கு சொந்தமான ரிசர்வ் பாரஸ்டில் பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.  இந்த சாலையில் போக்குவரத்து அதிகம்  கிடையாது.  மக்கள் நடமாட்டம் குைறவாக இருக்கும். இந்தப்பகுதியில்  வந்ததும் தமிழ்வாணன் பைக்கை சாலையோரம் நிறுத்திவிட்டு ராணியை  காட்டின் உள்புறத்துக்கு அழைத்துக்கொண்டு சென்றார். இருவரும் ஜாலியாக   இருந்துள்ளனர்.

அப்போது, அந்த வழியாக 2 பைக்கில் 4 பேர் வந்துள்ளனர்.  அவர்கள் சாலையோரம் பைக் அனாதையாக நிற்பதையறிந்து சந்தேகமடைந்து, நின்றனர். அந்தநேரத்தில், ஒருவித முனகல் சத்தம் கேட்டு காட்டுப்பகுதிக்குள் சென்றனர்.  அங்கு காதல் ஜோடிகள் சல்லாபத்தில் இருந்ததை கண்டனர். இதன்பின், தமிழ்வாணனை சரமாரியாக தாக்கினர். பின்னர், அரைகுறை ஆடையுடன் இருந்த ராணியை பலாத்காரம் செய்ய  முயன்றனர். இதனை கண்ட தமிழ்வாணன், 4 பேருடனும் போராடி உள்ளார். உடனே, 4 பேரும் சேர்ந்து தமிழ்வாணன் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதன்பின், ராணியின் வாயில் துணியை வைத்து அடைத்து மாறி மாறி  பலாத்காரம் செய்தனர். பின்னர் 4 பேரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். அவர்கள் சென்றதும் ராணி சோர்வுடன் எழுந்து, செடிகளுக்கு இடையே கிடந்த தனது செல்போன் மூலம்  108 ஆம்புலன்சுக்கும், பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து, சிறுகனூர் போலீசாருக்கும் தகவல்  தெரிவிக்கப்பட்டது. நள்ளிரவு  1 மணியளவில் போலீசார் சென்று ராணியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தமிழ்வாணன்  சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். ேமலும் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கெஞ்சியும் விடவில்லை

4  காமக்கொடூரன்களும் தமிழ்வாணனை தாக்கியபோது, அவரை விட்டு விடும்படி ராணி  கெஞ்சி உள்ளார். அதேநேரம் தமிழ்வாணன், 4 பேரையும் எதிர்த்து தாக்குதல் நடத்தி  உள்ளார். அதன்பிறகே 4 பேரும் அவரை கீழே தள்ளி  கத்தியால் கழுத்தில் குத்தி  கொலை செய்துள்ளனர். தமிழ்வாணனை  கொலை செய்ததை பார்த்த ராணி, இனி கொலைகாரர்கள் தன்னை விடமாட்டார்கள் என்பதை  அறிந்து கற்பை காக்க காட்டுக்குள் அங்கும் இங்கும் ஓடினார்.  ஆனால் 4 பேரும்  விடாமல் துரத்தி பிடித்து மாறி மாறி கற்பை சூறையாடினர்.

ஒருதலை காதலால் நடந்ததா?

போலீசார் நடத்திய விசாரணையில், ராணியை அதே பகுதியை சேர்ந்த இன்னொருவரும்  ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவர், தனக்கு கிடைக்காத ராணி யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று எண்ணியுள்ளார். இதனால்,  காதலர்கள் தனிமையில் இருந்தபோது, 4 பேருடன் சென்று கொலை செய்து, பலாத்காரத்தில் ஈடுபட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.  கொலை,  பலாத்காரம் நடந்த இடம் வனப்பகுதியாகும். பகலிலேயே இந்த காட்டுக்குள்   தனியாக யாரும் செல்ல மாட்டார்கள். ஆனால், தமிழ்வாணன் இரவு நேரத்தில் காதலியுடன் போய் உள்ளார். இதையறிந்து அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள்தான் இதை செய்திருக்க  வேண்டும். அல்லது வழக்கமாக  இப்பகுதியில் வழிப்பறியில்  ஈடுபடுகிறவர்கள், பலாத்காரத்தில் ஈடுபட்டிருக்கலாம் என  பல கோணத்தில் போலீசார் விசாரிக்கிறார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: