புதுடெல்லி: சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மா, ஊழல் குற்றச்சாட்டால் தீயணைப்பு துறைக்கு மாற்றப்பட்டார். அதை ஏற்க மறுத்து, தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார்.நாகேஸ்வரராவ் இடைக்கால இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில், சிபிஐக்கு புதிய இயக்குனரை தேர்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையிலான குழு, ் 24ம் தேதி டெல்லியில் ஆலோசனை நடத்துகிறது. இக்குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் கார்கே ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.