சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள திருவள்ளுவர் நடுநிலைப்பள்ளியில் 1973ம் ஆண்டு ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தவர் டி.சாந்தி. இவர் 32 ஆண்டுகள் பணியாற்றி, கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து தன்னை 2005-06 கல்வியாண்டு முழுவதும், அதாவது 2006ம் ஆண்டு மே 31ம் தேதி வரை பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று சாந்தி மனு கொடுத்தார். ஆனால், அவரது பணியில் திருப்தி இல்லை என்ற காரணம் கூறி, அவரது கோரிக்கையை பள்ளி தாளாளர் நிராகரித்து 2005ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆசிரியர் சாந்தி வழக்கு தொடர்ந்தார். 13 ஆண்டுகளாக நிலுவையில் கிடந்த இந்த வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி,மனுதாரர் 32 ஆண்டுகளாக ஆசிரியராக வேலை செய்துள்ளார். பணி தொடர்பாக அவர் மீது ஒரு குற்றச்சாட்டுக்கூட இல்லை. அப்படி இருந்தும், அவரது பணியில் திருப்தி இல்லை என்று தவறான காரணம் கூறி பணி நீட்டிப்பு வழங்க மறுக்கப்பட்டுள்ளது.