சென்னை: இந்திய துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு கடந்த 14ம் தேதி 3 நாள் பயணமாக மாமல்லபுரம் வருகை தந்தார். கடந்த 2 நாட்களாக அங்கு ஒரு தனியார் கடற்கரை ஓட்டலில் குடும்பத்துடன் ஓய்வெடுத்தார்.பின்னர், நேற்று காலை 8 மணிக்கு மாமல்லபுரத்தில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட புராதன சின்னங்களான கடற்கரை கோயில், அர்ச்சுனன் தபசு, 5 ரதங்கள் போன்றவற்றை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு குடும்பத்தினருடன் கண்டுகளித்தார்.முன்னதாக அவரை மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், தமிழக கலாசார முறைப்படி வரவேற்று, மாமல்லபுரத்தின் வரலாற்றை எடுத்து கூறினார்.