துணை ஜனாதிபதி மாமல்லபுரம் வருகை

சென்னை: இந்திய துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு கடந்த 14ம் தேதி 3 நாள் பயணமாக மாமல்லபுரம் வருகை தந்தார். கடந்த 2 நாட்களாக அங்கு ஒரு தனியார் கடற்கரை ஓட்டலில் குடும்பத்துடன் ஓய்வெடுத்தார்.பின்னர், நேற்று காலை 8 மணிக்கு மாமல்லபுரத்தில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட புராதன சின்னங்களான கடற்கரை கோயில், அர்ச்சுனன் தபசு, 5 ரதங்கள் போன்றவற்றை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு  குடும்பத்தினருடன் கண்டுகளித்தார்.முன்னதாக அவரை மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், தமிழக கலாசார முறைப்படி வரவேற்று, மாமல்லபுரத்தின் வரலாற்றை எடுத்து கூறினார்.

பின்னர் அவருக்கு சுற்றுலாத்துறை சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. அப்போது தொல்லியல் துறை அலுவலர் பரணிதரன் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். மாமல்லபுரத்துக்கு துணை ஜனாதிபதி வருகையை  முன்னிட்டு, டிஎஸ்பி சுப்பாராஜு தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: