பக்தர்களே உஷார் : திருப்பதி கோயில் அருகே சிறுத்தை நடமாட்டம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே சிறுத்தை நடமாட்டத்தால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.திருப்பதி ஏழுமலையான் கோயில் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு அலுவலகம் திருமலை ஏடிசி கார் பார்க்கிங் எதிரே உள்ளது. இங்கு  மத்திய, மாநில அமைச்சர்கள் , எம்பி, எம்எல்ஏக்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் என  முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்கள் மூலம் ஆர்ஜித சேவை டிக்கெட் மற்றும் விஐபி தரிசன டிக்கெட் ஒதுக்கீடு செய்யும் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் வனப்பகுதியில் இருந்து இந்த அலுவலகம் அருகே சிறுத்தை  ஒன்று வந்தது. இதனைக்கண்ட ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனடியாக அலுவலகம் உள்ளே சென்று கதவுகளை அடைத்துக்கொண்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்றது. தகவலறிந்த வனத்துறையினர்  சிறுத்தையை பிடிப்பதற்காக அதன் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: