சென்னை: காணும் பொங்கலை முன்னிட்டு காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. காமராஜர் சாலையில் பொதுமக்கள் சாலையில் முழுவதுமாக நிரம்பும் வரை எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படாது. உழைப்பாளர் சிலை மற்றும் கண்ணகி சிலை அருகில் மக்கள் கூட்டம் மிக அதிகமாக கூடும்போது வடக்கிலிருந்து வரும் வாகனங்கள் போர் நினைவு சின்னத்தில் திருப்பப்பட்டு, கொடிமர இல்லம் சாலை அண்ணா சாலை, ஜி.பி.ரோடு மணிக்கூண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாகச் செல்ல வேண்டும்.