டாஸ்மாக் சூபர்வைசரை தாக்கிய 2 பேர் கைது

புழல்: சோழவரம் அருமந்தை கூட்டு சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (32) சூபர்வைசராக வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் 30ம் தேதி இரவு திடீரென கடைக்குள் 4 பேர் புகுந்தனர். அங்கு பணியில் இருந்த சூபர்வைசர் புருஷோத்தமனை சரமாரியாக தாக்கிவிட்டு, மதுபாட்டில்கள் மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு தப்பினர். இதில், படுகாயம் அடைந்த புருஷோத்தமன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

புகாரின்பேரில், சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பல் குறித்து விசாரித்தனர். அதில், டாஸ்மாக் கடை சூபர்வைசரை தாக்கியவர்கள் ஆங்காடு பகுதியை சேர்ந்த சரத்ராஜ் (22), புழல் பாலாஜி (28) என தெரியவந்தது. எனவே, கடந்த 2 நாட்களுக்கு முன்பாக இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் பொன்னேரி மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பிய 2 பேரை தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: