சென்னை: விவசாயியை மிரட்டி பணம் பறிக்க முயன்றவரை பொதுமக்கள் சுற்றிவளைத்துபிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், 2017ல் ஒருவரை கொலை செய்து சடலத்தை தண்டவாளத்தில் வீசியதாக அந்த வாலிபர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி கிராமத்தை சேர்ந்தவர் துரை (45), விவசாயி. இவர் நேற்று முன்தினம் கும்மிடிப்பூண்டி பஜாரில் பொங்கல் பொருட்கள் வாங்கிவிட்டு பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். ரெட்டம்பேடு சாலை வழியாக வந்தபோது, காட்டுக்கொல்லை பகுதியை சேர்ந்த கணபதி (31) என்பவர் துரையை வழிமறித்து நிறுத்தினார். அவரிடம் பொங்கல் செலவுக்கு பணம் கொடு என மிரட்டியுள்ளார். இதை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர், கணபதியை பிடித்து, கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.