விவசாயியை மிரட்டி பணம் பறிப்பு : வாலிபரை கொலை செய்து சடலத்தை தண்டவாளத்தில் வீசிய ஆசாமி கைது

சென்னை: விவசாயியை மிரட்டி பணம் பறிக்க முயன்றவரை பொதுமக்கள் சுற்றிவளைத்துபிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், 2017ல் ஒருவரை கொலை செய்து சடலத்தை தண்டவாளத்தில் வீசியதாக அந்த வாலிபர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி கிராமத்தை சேர்ந்தவர் துரை (45), விவசாயி. இவர் நேற்று முன்தினம் கும்மிடிப்பூண்டி பஜாரில் பொங்கல் பொருட்கள் வாங்கிவிட்டு பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். ரெட்டம்பேடு சாலை வழியாக வந்தபோது, காட்டுக்கொல்லை பகுதியை சேர்ந்த கணபதி (31) என்பவர் துரையை வழிமறித்து நிறுத்தினார். அவரிடம் பொங்கல் செலவுக்கு பணம் கொடு என மிரட்டியுள்ளார். இதை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர், கணபதியை பிடித்து, கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

துரை கொடுத்த புகாரின் பேரில் கணபதியிடம் போலீசார் விசாரித்தனர். இதில், கடந்த 2017ம் ஆண்டு சுண்ணாம்புகுளம், ஓமசமுத்திரம் பகுதியை சேர்ந்த பிரபு (24) என்பவர் இலங்கை அகதிகள் முகாம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் சடலமாக கிடந்தார். அவரை கொலை செய்து சடலத்தை தண்டவாளத்தில் வீசியதாக கணபதி ஒப்புக்கொண்டதாக  போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கணபதியை கைது செய்து, பொன்னேரி மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: