இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரெக்சிட் ஒப்பந்தம் நிராகரிப்பு : பிரதமர் தெரசா மேவுக்கு சிக்கல்

லண்டன் : இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், பிரெக்சிட் ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால், அரசியல் ரீதியாக பிரதமர் தெரசா மேவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.  ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் கொடுக்கவில்லை. இதுகுறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கு எதிராக 432 பேர் வாக்களித்தனர். ஆதரவாக வெறும் 202 பேர் மட்டுமே ஓட்டு போட்டனர். பிரெக்சிட் ஒப்பந்தத்தைச் செயல்படுத்த இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, பல மாதங்களாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார். தற்போது அந்த ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்காததால், தெரசா மேவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்படுமேயானால், வரும் மார்ச் 29ம் தேதியுடன் இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கும்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று பிரதமர் தெரெசா மேவுக்கு எதிராக, அவரது கட்சியினர் பலரும் வாக்களித்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பொதுவாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இரண்டு கட்சிகளுக்குள்தான் வாக்குவாதம் நடக்குமே தவிர, ஒரே கட்சிக்குள் கலகம் நடக்காது. ஆனால், பிரதமர் தெரசா மேவுக்கு எதிராக நடந்த செயல் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. இதுகுறித்து, எதிர்கட்சித் தலைவர் ஜெர்மி கார்பின் கூறுகையில், “இரண்டு ஆண்டுகளாக பிரெக்சிட் ஒப்பந்தத்துக்காக பேசி வருகிறார் தெரசா மே. ஆனால், அவரது எண்ணம் நிறைவேறாது” என்றார். முன்னதாக ஒப்பந்தத்துக்கான வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் பேசிய தெரசா மே, “நாம் வாக்களிக்கப் போவது இந்தத் தலைமுறையின் மிக முக்கிய முடிவாக இருக்கும். என்னுடைய பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கு நீங்கள் ஆதரவளியுங்கள். இல்லையென்றால் பல விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: