ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து இந்திய அணி தோல்வி

ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து இந்திய அணி வெளியேறியது. ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. குரூப் ஏ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி பஹ்ரைன் அணியுடன் நேற்று மோதியது. இதில் டிரா செய்தாலே இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிவிடும் என்ற நிலையில், பஹ்ரைன் அணி கோலடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டது.

ஆனால் இந்தியாவின் தற்காப்பு அரணை தகர்க்க முடியவில்லை. கூடுதல் நேரத்தில் பஹ்ரைன் வீரர் ஜமார் ரஷீத் அடித்த ஒரு கோல் வெற்றி கோலாக மாறியது. இந்திய அணி வெறும் 3 புள்ளிகளோடு போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது. யுஏஇ, பஹ்ரைன் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: