ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து இந்திய அணி வெளியேறியது. ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. குரூப் ஏ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி பஹ்ரைன் அணியுடன் நேற்று மோதியது. இதில் டிரா செய்தாலே இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிவிடும் என்ற நிலையில், பஹ்ரைன் அணி கோலடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டது.