அரூர்: கொடநாடு விவகாரத்தில் முதல்வர் ஏன் பயப்பட வேண்டும்? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். தர்மபுரி மாவட்டம் அரூரில் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரத்தில், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான், முதல்வர் மீதுள்ள குற்றச்சாட்டில் உண்மை வெளிப்படும். கொடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமீனில் உள்ள 2 பேர், முதல்வர் மீது குற்றம் சுமத்தும்போது அவர் ஏன் பயப்பட வேண்டும்?. அவர்களை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?. இந்த விவகாரத்தில் தமிழக காவல் துறையோ, சிபிஐயோ விசாரணை செய்தாலும், நீதிபதியின் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.