திருநின்றவூர்: திருநின்றவூர், ராஜாங்குப்பம் கூவம் ஆற்று ஓரமாக செங்கல் சூளை பின்புறம் ஒரு வாலிபர் சடலம் கிடப்பதாக திருநின்றவூர் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர், சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது சடலமாக கிடந்தவருக்கு சுமார் 35 வயது இருக்கும். அவர் லுங்கி மட்டும் அணிந்து இருந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது இவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.