ஜோகன்னஸ்பர்க்: பாகிஸ்தான் அணியுடனான 3வது டெஸ்டில், 107 ரன் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்ரிக்கா 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த தென் ஆப்ரிக்கா 262 ரன் குவித்து ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 185 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து 77 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்க அணி 303 ரன் குவித்தது. அம்லா 71, டி காக் 129 ரன் விளாசினர். இதைத் தொடர்ந்து, 381 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான், 104 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில் ஆசாத் ஷபிக் - பாபர் ஆஸம் இருவரும் 4வது விக்கெட்டுக்கு கடுமையாகப் போராடினர். 3ம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்திருந்தது. ஆசாத் 48 ரன், பாபர் 17 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.