பாகிஸ்தான்: பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்காக வேலை பார்த்ததாக இந்திய ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் டேங்க் ரெஜிமண்ட் என்ற ராணுவ படைப் பிரிவு உள்ளது. இதில் பணிபுரிந்த அரியானா மாநிலத்தைச் சேர்ந்த சோம்பிர் என்ற வீரர், ஐ.எஸ்.ஐ., உளவாளி ஒருவருக்கு, இந்திய ராணுவம் சார்ந்த முக்கிய தகவல்களை பகிர்ந்த குற்றச்சாட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.