சென்னை: சிலைக்கடத்தல் வழக்குகளை சுதந்திரமாக விசாரிக்க பொன்.மாணிக்கவேல் எங்களை விடவில்லை என்று சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றிய ஏடிஎஸ்பி இளங்கோ கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சிலைக்கடத்தல் விவகாரத்தில் அழுத்தத்திற்கு மத்தியில் பணியாற்றதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பொய் வழக்கு, பொய் சாட்சியங்களை கைது செய்ய கோரி பொன்.மாணிக்கவேல் மிரட்டுவதாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் பணிபுரிந்து வரும் போலீசார் டிஜிபியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.