மதுரை : பிளாஸ்டிக் மீதான தடையை நீக்கக் கோரிய மனு தள்ளுபடி ஆனது. பிளாஸ்டிக் தடை தொடர்பான அரசாணைக்கு தடை விதிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழக அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி கே.கே. ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தமிழக அரசு கொண்டு வந்தது நல்ல திட்டம் தான் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.