×

சென்னை மாநகராட்சியில் விதிகளை மீறி பேனர் வைத்தால் ஒரு வருடம் சிறை: ஆணையர் எச்சரிக்கை

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், விதிகளை மீறி பேனர் வைத்தால் ஒரு வருடம் சிறை என சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். விதிமீறல் பேனர்கள் வைப்பதை தடுக்க வேண்டும் என்றும், தடுக்க நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சி வித்தியாசமின்றி டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்குகள் நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் விசாரித்து வருகின்றனர்.

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது சென்னை மாநகராட்சி தரப்பில் விதிமீறல் பேனர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில்,  அரசியல் கட்சியினர் வைத்த பேனர்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும், அதுதொடர்பாக யார் மீதும் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று பெரும்பாலான தகவல்கள் இடம் பெற்றிருந்தன. அதேசமயம் சில இடங்களில் பேனர் வைத்தவர்களே தானாக முன்வந்து  விட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசின் அறிக்கையால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், விதிமீறல் பேனர்களை தடுக்க வேண்டும் என்று பல உத்தரவுகளை போட்டாலும், அதை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என குற்றம்சாட்டினர். விதிமீறி பேனர்கள் வைப்போர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
விதிமீறி பேனர்கள் வைப்போர் மீது நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் அரசு அதிகாரிகள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விருப்பப்பட்ட கட்சியில் சேர்ந்து பணியாற்றுங்கள் என்று நீதிபதி கூறியுள்ளார். மேலும் காவல்துறை, அரசு அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் வழக்கில் அரசு எடுத்த நடவடிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், விதிகளை மீறி பேனர் வைத்தால் ஒரு வருடம் சிறை என சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து விதிகளை மீறி பேனர் வைத்தால் ஒரு வருடம் சிறை என சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பேனர் குறித்த புகார்களுக்கு பொதுமக்கள் 1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Commissioner ,Chennai Corporation , Chennai Corporation, Rule Banner, One Year Jail, Commissioner
× RELATED திருவான்மியூர் கடற்கரையில் வானில்...