×

ஆலங்குடி, கந்தர்வகோட்டையில் மக்கள் சாலை மறியல்

ஆலங்குடி: நிவாரணம் மற்றும் மின்சாரம் கோரி ஆலங்குடி, கந்தர்வகோட்டையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த மாங்காடு வாணியத்தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த மாதம் வீசிய கஜாபுயலால் ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்தன. ஆனால் ஒரு மாதம் ஆகியும் இப்பகுதியில் புதிய மின்கம்பங்கள் அமைப்பதற்கோ, இப்பகுதியில் மின் இணைப்பு கொடுப்பதற்கோ மின்வாரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் இப்பகுதியில் குடிநீரும் கிடைக்கவில்லை.

மேலும் இங்கு வசிக்கும் முதியோர் மற்றும் குழந்தைகள் இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாததால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த இப்குதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் இன்று காலை 8 மணியளவில் புதுக்கோட்டை - பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரமாகியும் இதுவரை எந்த அதிகாரியும் அங்கு வரவில்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதே போல் கந்தர்வகோட்டை அடுத்த மஞ்சம்பட்டி, மட்டங்கால் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கக்கோரி இப்பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மஞ்சம்பட்டியிலும், மட்டங்கால் பகுதியிலும் இன்று காலை 7 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனல் இப்பகுதியில் இன்று காலை  பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Alangudi ,Gandharvat , Alangudi, Gandharvat, People, Road Strike
× RELATED ஆலங்குடியில் இல்லம் தோறும் ஸ்டாலின்...