×

வெல்லத்தில் கலப்படம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் விவசாயிகள் கோரிக்கை

சேலம்: வெல்லத்தில் கலப்படம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கரும்பு விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். ரசாயனம் கலந்து வெல்லம் தயாரிப்போர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றம் கூறியுள்ளனர். 80% சர்க்கரையை கலந்து வெல்லம் தயாரிப்பால் கரும்பு விலை பாதியாக குறைந்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் கலப்பட வெல்லத்தை அரசே ஊக்குவிப்பதாக கரும்பு விவசாயிகள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர். கலப்படம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Salem , Sugar, contamination, action, farmers
× RELATED இறைச்சி கடைகள் செயல்பட தடை