×

தஞ்சாவூரில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் குறித்து பதில்தர எஸ்.பிக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவு

மதுரை: தஞ்சாவூரில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் குறித்து பதில்தர எஸ்.பிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெண்ணின் தாயார் எழுதிய கடிதத்தை வழக்காக ஏற்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. திருபுவனத்தில் ஜவுளிக்கடையில் பணியாற்றிய பெண்ணை கடை உரிமையாளர் பலாத்காரம் செய்யப்பட்டதன் தொடர்பாக புகார் அளித்தும் போலீஸ் நடவடிக்கை எடுக்காததால், உயர்நீதிமனற்ற நீதிபதிக்கு பெண்ணின் தாய் கடிதம் எழுதியுள்ளார். இதையடுத்து பலாத்கார புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி டிசம்பர் 20ம் தேதி பதித்தார் தஞ்சை எஸ்.பிக்கு நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Madurai ,court ,teenager ,rape ,Thanjavur , Madurai Hour, woman, rape, case
× RELATED பழைய அரசாணைப்படி ரேக்ளா ரேஸ்: ஐகோர்ட் அனுமதி